கருணாநிதி கோரிக்கை ஏற்பு: தே.ஜ. கூட்டணி அவசரக் கூட்டம்
சென்னை:
நரேந்திர மோடி விவகாரம் குறித்து விவாதிக்க உடனடியாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின்கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இதையடுத்து இன்று இரவு அவசர தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் கூட்டத்துக்கு பிரதமர் வாஜ்பாய்அழைப்பு விடுத்துள்ளார்.
மோடியை நீக்க வேண்டும் என ஏற்கனவே கருணாநிதி மறைமுகமாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
இப்போது சந்திர பாபு நாயுடு இந்த விவகாரத்தில் தீவிரமாக இருப்பதால் உடனடியாக இது குறித்து விவாதிக்கவேண்டும் என கருணாநிதி கோரியுள்ளார்.
மத்திய அரசுக்கு ஆபத்தோ, விபத்தோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் தான் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கூட்டத்தை கூட்டக் கோருகிறேன் என்று கூறிய கருணாநிதி, மோடியை நீக்க வேண்டுமா இல்லையா என்பதுகுறித்து அந்தக் கூட்டத்தில் தான் திமுக கருத்துத் தெரிவிக்கும் என்றார்.
அக் கூட்டத்தில் திமுகவை வைத்துக் கொண்டே அதிமுகவுடன் மத்திய அரசு நெருங்கி வருவது குறித்தும் திமுககேள்வி எழுப்பும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications