பரபரப்பான சூழலில் நாளை நாடாளுமன்றம் கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு தொடருமா என்ற பரபரப்பான சூழ்நிலையில்நாளை நாடாளுமன்றம் கூடுகிறது.
ஆதரவு வாபஸ் பெறப்பட்டால் நாளையே அரசு மீது எதிர்க் கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்.ஆதரவு தொடர்ந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஒற்றுமையின்மையை சுட்டிக் காட்டி எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபடும்.
நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால் அதிமுக மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும். அப்படிப்பட்ட நிலையில்திமுக எப்படி செயல்படும் என்பது கேள்விக்குறியாகும்.
இரு கட்சிகள் ஆதரித்து வாக்களித்தால், திமுகவும் அதிமுகவும் முதன்முறையாக ஒரே கூட்டணியில் இருக்கும்நிலை ஏற்படும்.
எப்படியோ மத்திய அரசுக்கு ஏற்படப் போகும் எந்த பாதிப்பும் தமிழக அரசியலிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது.












Click it and Unblock the Notifications