தமிழ்ப் புத்தாண்டு: கோவில்களில் அலைமோதும் கூட்டம்
சென்னை: தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்புப் பூஜைகள் நடந்து வருகின்றன.
இன்று சித்ரபானு ஆண்டு தொடங்கியது. அதிகாலை முதலே கோவில்களில் கூட்டம் அலைமோதியது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி அம்மனுக்கும் சொக்கநாதருக்கும் சிறப்பு அபிஷேகம்நடைபெற்றது. வழக்கத்தைவிட இந்த ஆண்டு கோவிலில் மிக அதிகமான கூட்டம் இருந்தது. இதையடுத்துபோலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி மாநிலம் முழுவகும் பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.மக்களை வீட்டிலேயே கட்டிப் போட சன், ராஜ், விஜய், பாரதி ஆகிய டிவி சானல்களில் காலை முதலே தொடர்ந்துசிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.
சன் டிவியும், ராஜ் டிவியும் சமீபத்தில் வந்த படங்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி இன்று மாலைஒளிபரப்ப உள்ளன.
ராஜ் டிவி 12 பி படத்தை ஒளிபரப்புகிறது. இதற்குப் போட்டியாய் சன் டிவி நந்தா படத்தை ஒளிபரப்புகிறது.












Click it and Unblock the Notifications