சென்னையில் கம்யூனிஸ்ட் தொண்டர் படுகொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை தரமணி பகுதியில் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு இடையூறாக இருந்த மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் ரவுடிக் கும்பால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

சென்னையில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் சகஜமாகி விட்டன. இரண்டு பேர் பார்த்துக் கொண்டால்,இன்று எங்கு கொள்ளை நடந்தது என்றுதான் பேசிக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.

இந்தச் சூழ்நிலையில் தரமணி பகுதியில் வியாழக்கிழமை இரவு பயங்கர படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது.

தரமணி கபாலி தெருவைச் சேர்ந்த பிரதீப் குமார், அப்பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வந்தார். அவர் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் தரமணி பகுதி குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

அப்பகுதியில் பொதுமக்களுக்கு எந்தப் பிரச்சினை என்றாலும் முன்னின்று தீர்ப்பதில் ஆர்வம் உடையவர் பிரதீப்குமார். அவருக்கு அனைத்துக் கட்சியிலும் நண்பர்கள் உண்டு.

மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதால் பிரதீப் குமாருக்கு அப்பகுதியில் உள்ள ரவுடிக் கும்பல் மூலம் ஆபத்து இருந்துவந்ததாகத் தெரிகிறது. குறிப்பாக புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிக்கும் ஒரு கும்பலுக்கும், பிரதீப் குமாருக்கும்பகை இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு தனது மனைவி சுசீலாவுடன் வெளியில் போய் விட்டு வீட்டுக்குத்திரும்பி வந்தார் பிரதீப்குமார். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு 8 மணியளவில் வீட்டை விட்டு அவர் வெளியேவந்தார்.

கருமாரியம்மன் கோவில் அருகே தனது நண்பரைப் பார்க்க பிரதீப் போய்க் கொண்டிருந்தார். அப்போது அங்குதிடீரென மின்சாரம் தடைபட்டதையடுத்து, அவரை சுமார் 15 பேர் கொண்ட ஒரு கும்பல் சூழ்ந்தது.

இருட்டில் என்ன நடக்கிறது என்று பிரதீப் குமாருக்குத் தெரியவில்லை, ஆனால் தன்னைச் சுற்றி ஒரு கும்பல்சூழ்ந்துள்ளது என்று மட்டும் தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்து ஓட முயன்றார்.

ஆனால் பிரதீப்பைச் சுற்றி நன்ற கும்பல், அவரை சரமாரியாக வெட்டித் தள்ளியது. பயங்கரமாக வெட்டப்பட்டபிரதீப் கழுத்து துண்டான நிலையில் அங்கேயே பிணமானார். அவரது இரண்டு கை விரல்களும் துண்டிக்கப்பட்டுசிதைந்து போயிருந்தன.

நடு ரோட்டில் பிரதீப் குமார் கொலையுண்டதைப் பார்த்த பொதுமக்கள் அவரை ராயப்பேட்டை அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.

தகவல் அறிந்ததும் வேளச்சேரி போலீசார் விரைந்து வந்தனர். கிண்டி துணை கமிஷனர் சத்திரபாண்டியும் சம்பவஇடத்திற்கு வந்தார். செல்வம் என்ற சப்பை செல்வம் என்பவனின் தலைமையிலான ரவுடிக் கும்பல்தான் இதைசெய்திருக்க வேண்டும் என்று போலீசாரும், பொதுமக்களும் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து இக்கும்பலைத்தேடும் பணியில் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

பிரதீப் குமார் கொலையையடுத்து தரமணி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. அங்கு பதற்றமான சூழ்நிலைநிலவியது. போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிரதீப் குமாரின் உடல் வெள்ளிக்கிழமை மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+