கோவையில் ரூ.3 லட்சம் மதிப்பு போலி மினரல் வாட்டர் பாட்டில்கள் பறிமுதல்
கோயம்புத்தூர்:
ஐ.எஸ்.ஐ. முத்திரை பெறாமல் விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள மினரல் வாட்டர்பாட்டில்கள் கோயம்புத்தூரில் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.
மினரல் வாட்டர் பாட்டில், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தண்ணீர் ஆகியவற்றை உணவு என்பதன் கீழ் மத்தியஅரசு அறிவித்து, அதற்கான தரத்தை நிர்ணயித்துள்ளது.
எனவே, ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாமல் மினரல் வாட்டர் விற்பளை செய்யப்படக்கூடாது என்று தமிழக அரசுசமீபத்தில் உத்தரவிட்டது.
கோயம்புத்தூரில் நேற்று மாநகராட்சி சுகாதரப் பிரிவின் நகர் நல அலுவலர் தாமோதரன் தலைமையில் காந்திபுரம்,ராம் நகர், பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும், ஆர்.எஸ்.புரம், ராம் நகரில் செயல்பட்டு வந்த 2 கிடங்குகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது ஐ.எஸ்.ஐமுத்திரை இல்லாத 60 வாட்டர் கேன்கள் உட்பட 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாட்டர் பாட்டில்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
மேலும், ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாத அனைத்து பாட்டில்கள், பாக்கெட்டுகள், கேன்கள் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன.
50 மில்லி லிட்டர் பாக்கெட்டுகளிலிருந்து 30 லிட்டர் கேன்கள் வரை பறிமுதல் செய்யப்பட்டதாக தாமோதரன்நிருபர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications