கே.பி.எஸ். கில்லிடம் குஜராத் ஒப்படைப்பு
டெல்லி:
குஜராத் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் பாதுகாப்புஆலோசகராக முன்னாள் பஞ்சாப் டி.ஜி.பியான கே.பி.எஸ். கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப்பில் 1980களில் மூண்ட கலவரங்களைத் திறமையாகக் கட்டுப்படுத்திய கில், அசாமிலும் இனக்கலவரங்களை அடக்குவதில் வெற்றி கண்டார்.
குஜராத்தின் சட்ட-ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு கில்லை நியமித்துள்ளது. தற்போதுகுஜராத்தில் நடந்து வரும் வன்முறைகளை ஒடுக்குவதில் மோடியிலிருந்து அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும்இனி கில்தான் ஆலோசனை வழங்குவார்.
மோடியின் முதல்வர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் மற்றும் போலீஸ் துறை ஆகிய மூன்றும் கில்லின் நேரடிக்கண்காணிப்பில்தான் செயல்படும்.
இன்று குஜராத் வந்து கில் தன்னுடைய பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்கிளம்புவதற்கு முன் அவர் உள்துறை அமைச்சர் அத்வானியைச் சந்தித்தார்.
ராஜ்யசபாவில் இன்றும் விவாதம்:
குஜராத் விவகாரம் குறித்து எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நேற்று ஆரம்பித்து நள்ளிரவு வரைதொடர்ந்த விவாதம் இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.
விவாதம் எப்படிப் போனாலும் ஓட்டெடுப்பு என்று வரும்போது ஆளுங்கட்சிக்கு ராஜ்யசபாவில் தோல்வி நிச்சயம்என்பதால், எதிர்க் கட்சிகளின் தீர்மானத்தை ஆதரிக்க மத்திய அரசு முடிவு செய்து விட்டது.
இதையடுத்து எதிர்க் கட்சிகளின் தீர்மானம் எளிதில் ராஜ்யசபாவில் நிறைவேறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய விவாதத்தின்போது குஜராத்தில் 355வது பிரிவை அமல் படுத்தியே தீரவேண்டும் என்று எதிர்க் கட்சிகள்பிடிவாதம் பிடித்தன. ஆனாலும் மத்திய அரசு வளைந்து கொடுக்க ஆரம்பித்ததையடுத்து, மோடியை நீக்கவேண்டும் என்ற தங்களுடைய பிடிவாதத்தையும் தளர்த்தின.
இருந்தபோதிலும் வன்முறைக்குக் காரணமான பஜ்ரங் தள் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளின்மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின.
மேலும் குஜராத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்தும், நிவாரண நடவடிக்கைகளை எவ்வாறுமேற்கொள்வது என்பது குறித்தும் ராஜ்யசபாவில் விவாதிக்கப்பட்டது.
ராஜ்யசபாவுக்கு முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவின்கன்னிப் பேச்சு காரணமாகவே அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
நள்ளிரவு 12 மணி வரை விவாதம் நீடித்ததையடுத்து, அது இன்றைக்கும் தொடர்ந்து நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்ட பின்னர் ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் விவாதம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications