இடைத் தேர்தலில் திமுகவுக்கு பாஜக "நோ சப்போர்ட்"
சென்னை:
வரும் 31ம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் திமுகவை ஆதரிக்கப் போவதில்லை என்று பாஜகமுடிவெடுத்துள்ளது.
தமிழகத்தில் இனி உறவு இல்லை, வெறும் நட்பு மட்டும்தான் என்று சமீபத்தில் திமுகவுடனான கூட்டணியைத்துண்டித்துக் கொண்ட பாஜக, இப்போதுதான் சுதந்திரமாகச் செயல்படுகிறோம் என்று கூறி அதன் தலைவர்கள்வளைய வந்தனர்.
ஆனால் மத்தியில் மட்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் திமுக தொடர்ந்து ஆதரித்துவருகிறது.
இந்நிலையில் நேற்று நடந்த பாஜக தேர்தல் குழுக் கூட்டத்தில், வரும் இடைத் தேர்தலில் திமுகவை ஆதரிக்கப்போவதில்லை என்று பாஜக தெளிவாக அறிவித்து விட்டது.
சைதாப்பேட்டையில் மதிமுக வேட்பாளரை ஆதரிக்கப் போவதாகவும் அச்சிறுப்பாக்கத்தில் பாமக வேட்பாளரைஆதரிக்கப் போவதாகவும் பாஜக அறிவித்துள்ளது.
ஆனால் வாணியம்பாடி இடைத் தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக பாஜக முடிவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications