சிதறிக் கிடக்கும் தேவர் அமைப்புகளை இணைக்க முயற்சி
தேனி:
தமிழகத்தில் சிதறிக் கிடக்கும் தேவர் சமூக அமைப்புகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வர நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டிருப்பதாக அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பின் தலைவர் சேதுராமபாண்டியன் தெரிவித்தார்.
தேனியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகம் முழுவதிலும் 126 தேவர் சமூக அமைப்புகள் இயங்கி வருகின்றன. இதனால் தேவர் சமுதாயத்திற்கு சிறந்தசேவையை செய்ய முடியாத நிலை உள்ளது.
எனவே இந்த அமைப்புகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர நாங்கள் முயற்சித்து வருகிறோம்.
ஆண்டிப்பட்டியில் வரும் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் எங்களது அமைப்பின் இரண்டாவது மாநிலமாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் 126 அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள். இவர்களில் ஓய்வு பெற்ற நீதிபதிகள்,ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், திரையுலகினர் உள்ளிட்டோரும் அடக்கம் என்றார் சேதுராம பாண்டியன்.