For Quick Alerts
For Daily Alerts
Just In
சிறை நண்பர்களுக்கு கஞ்சா கொடுத்த 2 கல்லூரி மாணவர்கள் கைது
சேலம்:
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களது தோழர்களுக்கு, கஞ்சா கொண்டு வந்து கொடுத்ததாக 2 கல்லூரிமாணவர்களை சேலம் போலீஸார் கைது செய்தனர்.
சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்டான்லி, அரிசிபாளையத்தைச் சேர்ந்தவர் சித்தேஸ்வரன்.இருவரும் கல்லூரி மாணவர்கள்.
இவர்களது நண்பர்கள் சிலர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பார்ப்பதற்காகசித்தேஸ்வரனும், ஸ்டான்லியும் சமீபத்தில் சிறைக்கு வந்தனர்.
பேசிக் கொண்டிருந்தபோதே அவர்கள் அங்கு தங்களது நண்பர்களிடம் கஞ்சா பொட்டலத்தைக் கொடுத்தனர்.
இதைத் தற்செயலாகக் கண்ட சிறைக் காவலர்கள், ஸ்டான்லியையும் சித்தேஸ்வரனையும் பிடித்து, ஹஸ்தம்பட்டிபோலீஸில் ஒப்படைத்தனர்.
Comments
Story first published: Sunday, May 5, 2002, 5:30 [IST]