தேர் திருவிழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.50,000 அரசு நிதியுதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர் திருவிழாவின் போது பலியானவர்களின் குடும்பத்தினருடககு ரூ.50,000 நிதியுதவிவழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் அம்மையகரம் கிராமத்தில் புனித சூசையப்பர் ஆலயத்தின் தேர் திருவிழாநடந்தது. அந்த தேர் ஊர்வலம் நடந்து முடிந்து தேர் ஆலயத்திற்குள் திரும்பும் போது, தேரின் உச்சிப்பகுதி உயர்மின் அழுத்தக் கம்பியில் மோதி, தேர் மின்சார தாக்குதலுக்குட்பட்டது.

இதனால் அந்த தேரை இழுத்து வந்த நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்து,தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000ம்,காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.6,000ம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க ஜெயலலிதாஉத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+