திருச்சி: மனைவியைக் குத்திக் கொன்ற போலீஸ்காரர்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சியில் குடும்பப் பிரச்சினை காரணமாக, தன் மனைவியை ஒரு போலீஸ்காரர் கத்தியால் குத்திக் கொலைசெய்தார்.

திருச்சியில் போலீஸ்காரராகப் பணிபுரிந்து வருகிறார் செந்தில்குமார். இவருடைய மனைவி பாலசுந்தரி.

இந்தத் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். நேற்றும் குடும்பப் பிரச்சினைகாரணமாக இருவருக்கும் வாக்குவாதம் நீடித்தது.

அப்போது கடும் கோபமடைந்த செந்தில்குமார், திடீரென்று கத்தியால் பாலசுந்தரியை சராமாரியாகக் குத்திச்சாய்த்தார்.

இதில் பலத்த காயமடைந்த பாலசுந்தரி, அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வரதட்சனைகாரணமாகத்தான் நேற்று இவர்கள் இருவருக்கும் தகராறு மூண்டதாகத் தெரிகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+