ராகிங்கை தட்டிக் கேட்ட மாணவர் அடித்துக் கொலை
சேலம்:
சேலத்தில் ராகிங் கொடுமையைத் தட்டிக் கேட்ட சாப்ட்வேர் என்ஜினியரிங் மாணவர் அடித்துக் கொலைசெய்யப்பட்டார்.
சேலம் சூரமங்கலம் தர்மன் நகரைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ் (19). இவர் மல்ல சமுத்திரம் என்ற ஊரில் உள்ளமகேந்திரா இன்ஜினியரிங் கல்லூரியில் எம்.எஸ்ஸி. சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார்.
இதே கல்லூரியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற மாணவர், ஜேசுதாஸின் சக மாணவர்களை ராகிங் செய்துள்ளார்.இதை பார்த்துக் கொண்டிருந்த ஜேசுதாஸ், அதை தட்டிக் கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த தினேஷ்குமார், கல்லூரி முடிந்ததும் சக மாணவர்களான கண்ணன், கார்த்தி, ப்ரவீண்மற்றும் கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 20 பேர் ஆகியோரைத் திரட்டிக் கொண்டு சென்று ஜேசுதாஸைஉருட்டுக்கட்டை மற்றும் இரும்புத்தடியால் சரமாரியாகத் தாக்கினான்.
இவ்வளவு பேர் சேர்ந்து நின்று தாக்கியதில் படுகாயமடைந்த ஜேசுதாஸ், உடனடியாக சேலம் தனியார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குள்ள மருத்துவர்கள் கைவிரித்ததையடுத்து, அவர் கோயம்புத்தூரில்உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.
அங்கு கடந்த ஐந்து நாட்களாகத் தீவிர சிகிச்சை பெற்றும் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக நேற்றுகாலை ஜேசுதாஸ் இறந்தார். இது தொடர்பாக ஜேசுதாஸின் பெற்றோர் மல்ல சமுத்திர போலீஸாரிடம் புகார்கொடுத்தனர்.
இதையடுத்து தினேஷ்குமார், கண்ணன், ப்ரவீண்,கார்த்தி உட்பட 9 பேரை மல்ல சமுத்திரம் போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications