கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு ஆசிரியர் ரூ.5 லட்சம் தர உத்தரவு
வேதாரண்யம்:
நாகப்பட்டனம் மாவட்டம் வேதாரண்யத்தில் பள்ளி மாணவியை கற்பழித்த ஆசிரியர் அம்மாணவிக்கு ரூ.5 லட்சம்நஷ்ட ஈடு தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
வேதாரண்யம் அருகே உள்ள குரவப்புலம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகள் விஜிலா (14).ஒரு தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி வகுப்பறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள் விஜிலா. அப்போது அந்தஅறையில் வேறு மாணவர்கள் யாரும் இல்லை. அப்போது பள்ளி அறைக்கு வந்த அந்த ஆசிரியர் ராஜரத்தினம்என்பவவர் அதையே பள்ளியறை ஆக்கினார்.
அந்த வகுப்பறையின் கதவையும் ஜன்னலையும் மூடிவிட்டு அங்கேயே வைத்து விஜிலாவை கற்பழித்தார்ராஜரத்தினம். இதைப் பற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் விஜிலாவை ராஜரத்தினம்மிரட்டியுள்ளார்.
இதையடுத்து இதை வெளியில் சொல்லாமல் இருந்துவிட்டாள் விஜிலா. ஆனால், அவள் கர்ப்பமடைந்தாள்.இதையடுத்து வீட்டில் விசாரித்ததில் விவரத்தைக் கூறியிருக்கிறாள். அவளது அண்ணன் ரவி உடனேராஜரத்தினத்தைச் சந்தித்து நியாயம் கேட்டுள்ளாார்.
ஆனால், வயிற்றில் வளர்ந்து வரும் கருவைக் கலைத்து விடுமாறு கூறி அதற்கு ரவியிடம் பணத்தையும்கொடுத்துள்ளார் ராஜரத்தினம்.
இதை ஏற்காத விஜிலாவின் குடும்பத்தினர் இந்தப் பிரச்சனையையை கிராமப் பஞ்சாயத்துக்குக் கொண்டுசென்றனர். ஆனால், பஞ்சாயத்திலும் ஆசிரியர் ராஜரத்தினம் பிடிகொடுக்காமல் பேசினார். பலமுறை பேசியும்பலன் கிடைக்காததால் கடந்த 16ம் தேதி இரவு வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் விஜிலா புகார் செய்தார்.
இதற்கிடையே, சம்பவம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் விசாரணையில், மாணவிபாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரும்,பள்ளி நிர்வாகமும் இணைந்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.5 லட்சம்நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications