சென்னையில் "எலக்ட்ரானிக்ஸ்" திருடன் கைது
சென்னை:
சென்னையில் செல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் திருடி வெளி மாநிலங்களில் விற்கும் ஒருதிருடனைப் போலீசார் வளைத்துப் பிடித்தனர்.
திருடர்களின் அட்டகாசம் சென்னையில் பெருகி வரும் நிலையில், போலீசார் பல திருடர்களை வலை வீசிப்பிடித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரைரயில்வே போலீசார் பிடித்து விசாரித்தனர்.
தன் பெயர் வேதாசலம் என்று கூறிய அவனுடைய கையில் ஒரு பெரிய மூட்டை இருந்தது. அதைக் கைப்பற்றிசோதனை செய்தபோது, அந்த மூட்டையில் ஏராளமான செல்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களைவைத்திருந்தது தெரிய வந்தது.
விசாரணையில், ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூருக்கு கடத்திச் செல்வதற்காக அந்தப் பொருட்களை அவன்திருடியதும் தெரிய வந்தது. அவனை உடனடியாகப் போலீசார் கைது செய்தனர்.
இதுபோன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் திருடிக் கடத்துவதற்கென்றே ஒரு கும்பல் செயல்படுவதாகப்போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications