நீங்க கேட்கல... நாங்க கொடுக்கல - பா.ஜ.க.
நாகர்கோவில்:
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் திமுக ஆதரவு கேட்காததால்தான் அங்கு அக்கட்சிக்குஆதரவு அளிக்கவில்லை என்று பாரதீய ஜனதாக் கட்சியின் துணைத் தலைவரான வேலாயுதம் கூறினார்.
நாகர்கோவிலில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சைதாப்பேட்டை தொகுதியில் தங்களுக்கு ஆதரவு தருமாறு மதிமுக கோரியிருந்தது. அதேபோல, அச்சிறுப்பாக்கம்தொகுதியில் ஆதரவு தருமாறு பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது. எனவேதான் இருதொகுதிகளிலும் பா.ஜ.க. அவர்களுக்கு ஆதரவு தந்துள்ளது.
ஆனால் திமுக தரப்பிலிருந்து ஆதரவு கேட்டு கோரிக்கை ஏதும் வரவில்லை. எனவேதான் அவர்களுக்கு ஆதரவுதரப் போவதில்லை என்று எங்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
வாணியம்பாடியில் எங்களது தோழமைக் கட்சிகள் யாரும் போட்டியிடவில்லை. அதற்காக நாங்கள் அதிமுகவைஆதரிக்க முடியாது. ஏனென்றால் அக்கட்சி எங்கள் கூட்டணியில் இல்லை. எனவேதான் அங்கு நடுநிலை வகிக்கமுடிவு செய்தோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications