மாறன் செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டு புரளி
சென்னை:
மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர். பாலு ஆகியோர் செல்லவிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ்விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தொலைபேசி தகவலையடுத்து சென்னை விமானநிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாறனும் பாலுவும் சென்னையிலிருந்து டெல்லி செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்லவிருந்தனர்.விமானம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை டெல்லி செல்வதாக இருந்தது.
இந்நிலையில், விமான நிலைய வளாகத்தில் உள்ள ஜெட் ஏர்வேஸ் அலுவலகத்திற்கு ஒரு டெலிபோன் கால் வந்தது.
அதில் பேசியவர், மத்திய அமைச்சர்கள் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறி விட்டுவைத்து விட்டார். இதையடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர்.
மத்திய அமைச்சர்கள் இருந்த விமானத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும் வெடிகுண்டு எதுவும்கண்டுபிடிக்கப்படவில்லை.
சோதனை நடந்து கொண்டிந்த நிலையில், மத்திய அமைச்சர்கள் இருவரும் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம்டெல்லிக்கு அனுப்பப்பட்டனர். மற்ற பயணிகள் வேறு விமானத்தில் ஏற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டனர்.
இதற்கிடையே, வெடிகுண்டு புரளியைக் கிளப்பியவர் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள பொதுத் தொலைபேசிபூத்திலிருந்து பேசியது தெரிய வந்துள்ளது. அந்த நபரைப் பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications