சைதாப்பேட்டையில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராதாரவி
சென்னை:
தமிழக சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று துவங்கியதையடுத்து, சைதாப்பேட்டைஅதிமுக வேட்பாளரான நடிகர் ராதாரவி தன்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
வரும் 31ம் தேதி சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும அச்சிறுப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. வரும் 13ம் தேதி மாலை 3 மணி வரைவேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
இந்நிலையில் இன்று காலை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடுவதற்காக பத்மராஜன் என்ற சுயேட்சைவேட்பாளர் முதலாவதாகத் தன்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
இதே தொகுதி அதிமுக வேட்பாளரான ராதாரவி, பகல் சுமார் 1 மணியளவில் அதிமுக பிரமுகர்கள் மற்றும்தொண்டர்கள் புடைசூழச் சென்று தன்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
சைதாப்பேட்டை தொகுதி தேர்தல் அதிகாரியான ஜெயேந்திர சேவியர் இந்த இரு வேட்புமனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
இதற்கிடையே வாணியம்பாடி தொகுதி அதிமு வேட்பாளரான வடிவேலு மற்றும் அச்சிறுப்பாக்கம் தொகுதிஅதிமுக வேட்பாளரான பூவராகமூர்த்தி ஆகியோரும் தங்களுடைய வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்தனர்.












Click it and Unblock the Notifications