தமிழகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நாளை துவக்கம்
சென்னை:
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல்துவங்குகிறது.
தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநலங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் வரும் 9ம்தேதி வரை இந்த கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.
கடந்த 1997ம் ஆண்டு கடைசியாக யானைகள் கணக்கெடுப்பு நடந்தது. அதன் பிறகு இப்போதுதான்நடக்கவுள்ளது.
அப்போதைய கணக்கெடுப்பின்படி, நான்கு மாநலங்களிலும் அடங்கிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்சுமார் 2,800 யானைகள் இருந்ததாகத் தெரிய வந்தது.
ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவில் மட்ம் சுமார் 15,000 யானைகள் உள்ளன. இந்தியா முழுவதும் சுமார் 28,000யானைகள் இருப்பதாகவும் 1997ம் ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
யானைகள் கணக்கெடுப்புப் பணியில் வன ஊழியர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும்ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் பங்கேற்பார்கள்.
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் அடங்கிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 25பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
வயதான யானைகள், ஆண் யானைகள், பெண் யானைகள், குட்டி யானைகள், நடுத்தர வயது யானைகள் எனபல்வேறு பிரிவுகளின் கீழ் யானைகள் கணக்கெடுக்கப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications