ஊழியர்களின் உரிமைக் குரலை பறிக்கிறார் ஜெ.: கருணாநிதி
சென்னை:
அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வதைத் தடுக்கும்விதமாகத் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சட்ட மசோதாவை திமுக தலைவர் கருணாநிதி கடுமையாகவிமர்சித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது போக்குவரத்து துறை ஊழியர்கள், மின்துறை ஊழியர்கள், நீதிமன்ற ஊழியர்கள்,தலைமைச் செயலக ஊழியர்கள் ஆகியோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தடை செய்யும் கடுமையான சட்டம்தமிழகத்தில் கொண்டு வரப்படவுள்ளது.
இதையும் மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இதற்கானசட்ட மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சென்னையில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அரசு ஊழியர்கள் உள்பட அனைத்து ஊழியர்களிடமுமே முந்தைய திமுக அரசு சுமூகமாகவே பழகி வந்தது.அவர்களுடைய கோரிக்கைகளும் நியாயமாக முறைகளில் பரிசீலிக்கப்பட்டன.
ஆனால் தற்போதைய அதிமுக அரசோ அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல்உள்ளது. இதை எதிர்த்து வேலைநிறுத்தம் போராட்டங்களைக் கூட நடத்த விடாமல் சட்டம் கொண்டு வர முயற்சிசெய்து வருவது வேதனைக்குரியது.
அதிமுக அரசின் ஏதேச்சாதிகாரத்தைத்தான் இந்த சட்ட மசோதா தெளிவாகக் காட்டுகிறது. இந்த சட்ட மசோதாஊழியர்களின் உரிமைக் குரலை நசுக்கி விடும்.
"தொழிலாளர்கள் வாய் திறந்தால் தொலைத்து விடுவோம்" என்று மிரட்டுவது போலவே இந்த சட்ட மசோதாஅமைந்துள்ளது.
உழவர் சந்தை திட்டத்திலிருந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கும் திட்டம் வரைதிமுகவின் அனைத்துத் திட்டங்களையும் முடக்கி வைத்த அதிமுக அரசு, தற்போது கிராமங்களில் ஓடிக்கொண்டிருக்கும் மினி பஸ்களை நிறுத்தட்டும் பார்ப்போம் என்று அவ்வறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.