இலங்கை கடற்படை மீது புலிகள் சராமாரி புகார்து
கொழும்பு:
இலங்கையில் விரைவில் துவங்கவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையையும் தற்போது அமலில் உள்ள நிரந்தரப்போர்நிறுத்தத்தையும் சீர்குலைக்க அந்நாட்டு கடற்படை முயற்சி செய்வதாக விடுதலைப்புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆனால் கடந்த மே 1ம் தேதி வல்வெட்டித்துறை அருகே படகுகள் மூலம் ஆயுதங்கள் கடத்துவதாகக் கூறி, இரண்டுஅப்பாவி மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொன்று விட்டதாகப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இலங்கைக் கடற்படையினரின் இந்தச் செயல், அமைதிப் பேச்சுவார்த்தையைப் பெரிதும் பாதிக்கக் கூடியது என்றும்புலிகள் நேற்று இரவு தெரிவித்தனர். அதோடு தற்போது அமலில் இருந்து வரும் நிரந்தரப் போர்நிறுத்தஒப்பந்தத்தையும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் புலிகள் கூறினர்.
முன்னதாக புலிகளின் படகைக் கைப்பற்றியதாகவும் அதிலிருந்து ஏராளமான ஆயுதங்களைப் பறிமுதல்செய்ததாகவும் இலங்கை கடற்படை தெரிவித்தது.
ஆனால் புலிகள் இதைக் கடுமையாக மறுத்தனர். அந்தப் படகில் சென்றவர்கள் மீனவர்கள்தான் என்றும், படகைத்தகர்க்கும்போது அதிலிருந்த இரண்டு மீனவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் புலிகள் கூறினர்.
இதற்கு சாட்சியாக அந்தச் சம்பவத்திலிருந்து தப்பிய வேறு சில மீனவர்களை சுட்டிக் காட்டி புலிகள் தங்கள்வாதத்தை நியாயப்படுத்தினர். தாக்குதல்களிலிருந்து தப்பிய இந்த 36 மீனவர்களும் நடுக்கடலிலிருந்து நீந்தியேதப்பி வந்து கரை சேர்ந்தனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு மீனவர்களும் முஸ்லீம்கள் என்று கூறிய புலிகள், மேலும் சில மீன்பிடிப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் ராக்கெட் வீசித் தகர்த்து விட்டதாகக் குற்றம் சாட்டினர்.