பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வாக்களித்த புதுவை மக்கள்
பாண்டிச்சேரி:
பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த 1,888 பேர் வாக்களித்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் ஒரு காலத்தில் இருந்த பாண்டிச்சேரியில் 3,775 பேருக்கு பிரெஞ்சு நாட்டுத்தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் எந்தத் தேர்தல் நடந்தாலும் பாண்டிச்சேரியிலும் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டு ஓட்டுப் பதிவுநடைபெறும்.
இந்தியாவுடன் பாண்டிச்சேரி இணைந்து விட்டபோதிலும், தங்களது கட்டுப்பாட்டில் இருந்த பகுதி என்பதால்பாண்டிச்சேரிக்கு இந்த விசேஷ கெளரவத்தை பிரான்ஸ் அரசு கொடுத்துள்ளது.
அந்த வகையில் நேற்று பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் பாண்டிச்சேரியிலும் வாக்குப் பதிவு நடந்தது.இதில் 50.1 சதவீத வாக்குகள் பதிவாகின. அதாவது 1,888 பேர் வாக்களித்தனர். இவர்களில் 14 பேருடையவாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டன.
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் ஜேக்ஸ் சிராக் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.