ஆண்டிப்பட்டி அருகே பலே போலி சாமியார் கைது
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே ரூபாயை இரட்டிப்புச் செய்து தருவதாக கூறி ஏமாற்றி வந்த போலி சாமியாரை தேனிமாவட்ட போலீஸார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது ராஜதானி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துமணி. இவர்சாமியார்களுக்கே உரித்தான குறி சொல்வது போன்ற வேலைகளைச் செய்து வந்தார். தன்னை நாடி வரும்பக்தர்களிடம் ரூ.1 லட்சம் கொடுத்தால் அதை ரூ.5 லட்சமாக மாற்றித் தருவேன் என்று கூறியுள்ளார்.
முத்துமணியின் வார்த்தைகளை கேட்ட பலர் கனவில் மிதந்தனர். ஆஹா, வேகமாக பணக்காரராக மாறும் வழியைஅல்லவா சாமியார் சொல்கிறார் என்று பேராசைப்பட்டனர். இதையடுத்து கடன் வாங்கியும், வீட்டிலிருந்தநகைகளை விற்றும் பணம் சேர்த்து முத்துமணியிடம் கொண்டு வந்து கொடுத்தனர்.
பணத்தை வாங்கிய முத்துமணி அவற்றை ஒரு உண்டியல் போன்ற கலத்தில் போடச் செய்துள்ளார். பின்னர் அதைத்துணியால் மூடி, இதை வீட்டுக்கு எடுத்துப் போங்கள். சில நாட்கள் கழித்து திறந்து பாருங்கள், உங்களது பணம்எனது மந்திர சக்தியால், இரட்டிப்பாகியிருக்கும், சில நேரங்களில் மும்மடங்காயிருக்கும் என்று கூறி விபூதிகொடுத்து அனுப்பி வைத்துள்ளார்.
வீட்டுக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு உண்டியலைத் திறந்து பார்த்தவர்கள் அதிர்ந்தனர். அவர்கள் கொடுத்தபணம் மொத்தம் அங்கு இல்லை, மாறாக கொஞ்சம் போல ரூபாய் தாள்கள்தான் இருந்தன.பதறியடித்து அவர்கள்முத்துமணியிடம் வந்து கேட்டபோது, உங்களை கடவுள் ஆசிர்வதிக்கவில்லை என்று தெரிகிறது. அடுத்த முறைநிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும் என்று கூறி மறுபடியும் மறக்காமல் விபூதி கொடுத்து அனுப்பியுள்ளார்முத்துமணி.
இப்படியே கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழில் நடத்தி வந்துள்ளார் முத்துமணி என்று தெரிகிறது. இந்த நிலையில்வேதமுத்து சேர்வை என்பவரின் மகன் அல்போன்ஸ் சமீபத்தில் முத்துமணியின் பக்தர் ஆனார்.ஆனால்,முத்துமணியின் நடவடிக்கைகளில் இவருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தேனி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார். எஸ்.பி. அமல்ராஜ்உத்தரவின் பேரில், போலீஸார் முத்துமணியை கைது செய்தனர். அவருடன் ஒரு பெண் உள்பட 4 பேரும் கைதுசெய்யப்பட்டனர். தன்னுடைய ஏமாற்று வித்தையைப் போலீசாருக்குச் செய்தும் காண்பித்தார் இந்தப் போலிச்சாமியார்.
இவர்களிடமிருந்து ரூ.15,000 பணம், டிராக்டர், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் போன்றவற்றை போலீசார் பறிமுதல்செய்தனர்.












Click it and Unblock the Notifications