பிரபாகரனை சந்தித்தாரா பார்வர்ட் பிளாக் எம்.எல்.ஏ.?
சென்னை:
அகில இந்திய பார்வர்ட் பிளாக் எம்.எல்.ஏ. சந்தானம் இலங்கைக்குச் சென்றது குறித்து தமிழக சட்டசபையில் நேற்று(திங்கள்கிழமை) சுவாரஸ்யமான விவாதம் நடந்தது.
சமீபத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் சந்தானம். இலங்கைப் பயணத்திற்குப் பிறகு அவர்திங்கள்கிழமைதான் சபைக்கு வந்திருந்தார்.
அவர் வந்தவுடன் பாமக தலைவர் ஜி.கே. மணி எழுந்து, சந்தானம் வெற்றிகரமாக இலங்கை சென்று வந்தது குறித்துவாழ்த்துத் தெரிவித்தார். அதேபோல, சபாநாயகர் காளிமுத்துவும் வாழ்த்துத் தெரிவித்தார்.
அப்போது எழுந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பழனிச்சாமி, உறுப்பினர் சந்தானம் இலங்கைசென்றிருந்தபோது, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்தாரா என்பதை தெரிந்து கொள்ளவிரும்புவதாகக் கூறினார். இதையடுத்து சபையில் சிரிப்பலை எழுந்தது.
அப்போது குறுக்கிட்ட காளிமுத்து, சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை தொடங்குமாறுகேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications