இமயமலை செல்லும் திருச்சி மலையேற்றக் குழுவினர்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

இமயமலையில் உள்ள ஜோகின்-3 என்ற 26,000 அடி உயரமுள்ள சிகரத்தில் ஏறி சாதனை படைப்பதற்காகதிருச்சியைச் சேர்ந்த 15 மலையேற்றக் குழுவினர் இன்று இங்கிருந்து கிளம்பினர்.

திருச்சியில் உள்ள "சைன்ஸ் அண்ட் அட்வென்ச்சர்" என்ற கிளப்பைச் சேர்ந்த இந்த 15 பேரும் இன்று கொடியசைத்துஅன்புடன் வழியனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு சர்வதேச மலையேறுபவர்கள் ஆண்டாக அனுசரிக்கப்படுவதையொட்டி இவர்கள் இந்தச் சாதனைப்பயணத்தை மேற்கொள்கின்றனர்.

தென்னிந்தியாவிலிருந்து இமயமலைக்குச் செல்லும் ஒரே மலையேற்றக் குழு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையேற்றத்தில் மிகுந்த அனுபவமும் திறமையும் பெற்றுள்ள ரமணன் என்பவர் இந்தக் குழுவினரைத் தலைமைதாங்கி நடத்திச் செல்கிறார்.

வரும் மே 23 ஆம் தேதி ஜோகின்-3 சிகரத்தில் ஏறி இந்தியாவின் மூவர்ணக் கொடியை இந்தக் குழுவினர் பறக்கவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி மாவட்டக் கலெக்டர் மணிவாசனிடமிருந்து இந்த மூவர்ணக் கொடியை ரமணன் பெற்றுக் கொள்ள,சாதனைக் குழுவினரின் பயணம் இமயமலை நோக்கித் தொடங்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+