தொடங்கியது கொடைக்கானல் சீசன் !!
கொடைக்கானல்:
ஊட்டியில் தற்போது சீசன் களை கட்டிக் கொண்டிருப்பதையடுத்து, கொடைக்கானலுக்கும் சுற்றுலாப் பயணிகளின்எண்ணிக்கை மளமளவென்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும், அன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களில்பெய்த மழை கோடையின் வெப்பத்தைத் தணித்து விட்டது.
ஆனால் இந்நிலை இரண்டு நாட்களுக்கு மட்டுமே நீடித்தது. நேற்று காலையிலிருந்தே அக்னி வெயிலின் கொடுமைதமிழக மக்களை வாட்டியெடுக்க ஆரம்பித்து விட்டது.
ஏற்கனவே கோடை வெயிலின் உக்கிரத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் கோடை விடுமுறையைப் பயன்படுத்திக்கொண்டு ஊட்டிக்குக் கூட்டம் கூட்டமாகப் படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிலும் சீசன் நேற்று துவங்கியுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 8,000 அடி உயரத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல்வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து கொடைக்கானல் சீசன் களை கட்ட ஆரம்பித்துள்ளது. வழக்கத்தை விட வெகு விரைவாகவே இந்தஆண்டு சீசன் தொடங்கி விட்டதாகக் கொடைக்கானல் மக்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications