For Daily Alerts
Just In
ஊட்டி மலர்க் கண்காட்சியில் "ரஜினி" ரோஜா
ஊட்டி:
ஊட்டியில் வரும் 12ம் தேதி தொடங்கவுள்ள மலர்க் கண்காட்சியில் நடிகர் ரஜினிகாந்த் பெயரிடப்பட்டுள்ள ரோஜாசெடியும் இடம் பெற்றுள்ளது.
ஊட்டி விஜயநகர் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் நூற்றாண்டு ரோஜாப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொட்டானிக்கல் கார்டனிலும் ஆயிரக்கணக்கான மலர்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த இரு இடங்களிலும வரும் 12ம் தேதி மலர்க் கண்காட்சி தொடங்குகிறது.
மொத்தம் 2,240 வகையான ரோஜாப் பூக்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒரு ரகத்திற்கு நடிகர் ரஜினியின்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மொத்தம் 89 புதிய ரக மலர்கள் இந்த ஆண்டு கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Comments
Story first published: Tuesday, May 7, 2002, 5:30 [IST]