சிறுமியை கற்பழித்துக் கொன்றவன் தூக்கிலிருந்து தப்பினான்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

8 வயது சிறுமியைக் கற்பழித்துக் கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு ஆயுள்தண்டனையே போதும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவன் கடந்த 1998ம் ஆண்டு மாரியப்பன் என்பவரின் மகளானஇந்துமதி என்ற 8 வயது சிறுமியைக் கற்பழித்துள்ளான். அப்போது இந்துமதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து செல்லத்துரை கைது செய்யப்பட்டு அவன் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் அவனுக்குதூக்குத் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் இந்தத் தூக்குத் தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செல்லத்துரை அப்பீல் செய்தான்.இந்த அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதி தினகர் மற்றும் நீதிபதி மலை சுப்ரமணியன் ஆகியோர் தங்கள் தீர்ப்பில்கூறியிருப்பதாவது:

செல்லத்துரையின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில், அபூர்வமான வழக்குகளில் மட்டுமே தூக்குத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் செல்லத்துரையின் வழக்குஅபூர்வமான வழக்கு அல்ல.

எனவே செல்லத்துரைக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிடுகிறோம் என்றுநீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+