பெண்ணின் சேலையை அவிழ்த்த மார்வாடி இளைஞர் கைது
சென்னை:
அடகுக் கடையில் மோதிரம் வாங்க வந்த பெண், நகையை திருடி விட்டதாகக் கூறி அவரது புடவையைவலுக்கட்டாயமாக அவிழ்த்த மார்வாடி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கலாவதி. இவர் நகை வாங்குவதற்காக அமைந்தகரையில் உள்ளதாரா நகைக் கடைக்கு வந்தார். இது ஒரு அடகுக் கடையாகும்.
அந்தக் கடையில் விமல் என்ற மார்வாடி இளைஞர் இருந்தார். அவரிடம் தான் மோதிரம் வாங்க வந்திருப்பதாககலாவதி கூறினார்.
இதையடுத்து ஒன்பது மோதிரங்களை எடுத்துக் காண்பித்தார் விமல். ஆனால் கலாவதிக்கு எதுவும் பிடிக்கவில்லை.இதையடுத்து மோதிரம் வேண்டாம் என்று கூறி விட்டு அவர் கிளம்பினார்.
அப்போது, அங்கிருந்த ஒன்பது மோதிரங்களில் ஒன்று குறைவதாகக் கூறிய விமல், அதை கலாவதிதான்எடுத்ததாகக் கூறி அவரை அதட்டினார். இதைக் கேட்டு அதிர்ந்து போன கலாவதி, நான் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தபெண். திருடும் பழக்கமெல்லாம் எனக்குக் கிடையாது என்று கூறினார்.
ஆனால் விமல் விடாப்பிடியாக, உங்களை நம்ப முடியாது, உங்கள் புடவையை அவிழுங்கள். மோதிரம்இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்டுப் பயந்து போன கலாவதி, இது என்னஅநயாயமாக இருக்கிறது. குடும்பத்துப் பெண்ணிடம் பேசக் கூடாத வார்த்தைகளையெல்லாம் பேசுவதா என்றுகண்ணீருடன் கூறினார்.
ஆனால் அதை காதிலேயே போட்டுக் கொள்ளாத விமல், திடீரென்று கலாவதியின் சேலையை அவிழ்க்கஆரம்பித்தார். அவரிடமிருந்து சேலையைப் பறித்துக் கொண்ட கலாவதி, வேகமாக வெளியே வந்தார்.
நேராக அருகில் இருந்த அமைந்தகரை போலீஸ் நிலையத்திற்குச் சென்று இதுகுறித்து புகார் கொடுத்தார் கலாவதி.
துணை கமிஷனர் பிரபாகரன் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, கலாவதியின் சேலையை அவிழ்த்தவிமலைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications