ஸ்டாலின் பதவியை பறிக்கும் சட்ட மசோதா நாளை நிறைவேற்றம்
சென்னை:
சென்னை மாநகர மேயர் மற்றும் திமுக எம்.எல்.ஏவான மு.க.ஸ்டாலினின் ஏதேனும் ஒரு பதவியை பறிக்க வகைசெய்யும் சட்ட மசோதா நாளை தமிழக சட்டசபையில் நிறைவேறுகிறது.
ஸ்டாலினின் எம்.எல்.ஏ. பதவி அல்லது சென்னை மாநகர மேயர் பதவியைப் பறிக்கும் நோக்கத்திலேயேகொண்டுவரப்பட்ட இந்த சட்ட மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் துரைராஜ் சட்டசபையில் கடந்த ஏப்ரல்22ஆம் தேதி தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவை திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்த்தன.
இந்த மசோதா அரசிதழில் வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. பதவியை ராஜினாமாசெய்ய வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் வகித்து வரும் மேயர் அல்லது துணைமேயர் பதவி பறிக்கப்படும்என்று இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் நாளை இந்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள்நாளை முடிந்தவுடன், இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. நாளை மறுநாள் (மே 9ம் தேதி) தமிழகசட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே உலக மேயர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரேசில் சென்றுள்ள ஸ்டாலின், நாளைமறுநாள் சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications