மதுரை: டாக்டர் மாணவர் விஷ ஊசி போட்டு தற்கொலை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக இருந்து வரும் மாணவர் அங்குள்ள ஒருலாட்ஜில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூர் அருகே வித்யா நகர் பகுதியில் வசித்து வரும் சிவ யோகப்பன் என்பவருடைய மகன் சச்சின் கார்டின்(30). முதுகலை மருத்துவ மாணவரான இவருடைய தந்தையும் ஒரு டாக்டர்தான்.
மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் பயிற்சி டாக்டராக இருந்து வந்தார் சச்சின். அங்குள்ளஒரு லாட்ஜில் தங்கியிருந்த சச்சின், விஷ ஊசி கையில் ஏற்றப்பட்ட நிலையில் இன்று அதிகாலை இறந்து கிடந்தார்.
இதைக் கண்ட லாட்ஜ் ஊழியர்கள் உடனடியாக இச்சம்பவம் குறித்துப் போலீசாரிடம் தெரிவித்தனர். இதுகுறித்துபோலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications