சென்னையில் வெயிலோ வெயில்
சென்னை:
அக்னி நட்சத்திரத்தின் உக்கிரத்தை 2 நாட்களாக மழை விரட்டி அடித்து கொண்டிருந்தாலும் நேற்று சென்னைவெயில் அந்நகர மக்களைப் பெரிதும் வாட்டியெடுத்து விட்டது.
கடந்த மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் கோடைவெப்பம் அனலாகத் தகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அக்னி நட்சத்திரம் தொடங்கிய அன்றே தென் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து,மக்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்கச் செய்தது. சென்னையிலும் வெயிலின் தகிப்பு குறைந்து குளுமையானகாற்று வீசிக் கொண்டிருந்தது.
இந்நிலையில் தற்போது வெயிலின் கொடுமை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று சென்னையில் 101டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இது தான் கோடைக்காலத்தில் சென்னையில் பதிவான உச்சக் கட்டவெப்பமாகும்.
திருச்சியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்த வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.