இடைத் தேர்தலில் போட்டியா? - தமாகா நாளை முடிவு
சென்னை:
சட்டசபை இடைத் தேர்தலில் தமாகா போட்டியிடுவது குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் முடிவைஅறிவிக்கப் போவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.
இதுகுறித்து சென்னையில் இன்று நிருபர்களிடம் வாசன் கூறியதாவது:
சட்டசபை இடைத் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடுவது குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் முடிவைஅறிவிப்போம்.
இந்த இடைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய தேசிய லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு கேட்டு கோரிக்கைவிடுத்துள்ளன.
தமிழக அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்கள்போராட்டம் நடத்துவதைத் தடுக்கும் விதமாக கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்.
இது தொழிலாளர்களை அச்சுறுத்துவதாகவும், அவர்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும் உள்ளது. அதனால் அரசுஇதை மறுபரிசீலனை செய்து, வாபஸ் பெற வேண்டும்.
காங்கிரஸ்-தமாகா இணைப்பு குறித்து பேச்சு நடத்துவதற்காக காங்கிரஸ் மேலிடக் குழு டெல்லியிலிருந்து விரைவில்சென்னை வர உள்ளது. அதன் பின்னர் இணைப்பு தேதி குறித்து அறிவிக்கப்படும் என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications