For Daily Alerts
Just In
பாதாள சாக்கடையில் விஷ வாயு: 2 தொழிலாளர்கள் பலி
சென்னை:
சென்னை தரமணி பகுதியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டிருந்த அடைப்பை சரி செய்ய முயன்ற 2 சுத்திகரிப்புப்பிரிவு ஊழியர்கள் விஷ வாயு தாக்கி பரிதாபமாக இறந்தனர்.
தரமணி பஸ் நிலையம் பகுதியில் உள்ளது பீலி அம்மன் கோவில் தெரு. இங்குள்ள பாதாள சாக்கடையில் அடைப்புஏற்பட்டுள்ளதாக புகார் வந்தது.
இதையடுத்து சுத்திகரிப்புப் பிரிவு ஊழியர்கள் ரவி மற்றும் கண்ணன் ஆகியோர் அங்கு விரைந்தனர். பாதாளசாக்கடைக்குள் அவர்கள் இறங்கிய சிறிது நேரத்தில் விஷ வாயு தாக்கியதில் மயங்கி உள்ளேயே விழுந்துபரிதாபமாக இறந்தனர்.
அவர்களது உடலை மீட்க அப்பகுதி பொதுமக்கள் முயன்றனர். ஆனால் உள்ளே குனிந்து பார்த்தாலே மூச்சைஅடைக்கும் விதத்தில் விஷ வாயு நெடி தாக்கியதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
தீயணைப்புப் படை வீரர்களுக்கும், வேளச்சேரி போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story first published: Wednesday, May 8, 2002, 5:30 [IST]