Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1,000 பஞ்சாப் கமாண்டோக்கள் குஜராத்துக்கு விரைவு

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

குஜராத் வன்முறைகளை அடக்குவதற்காக பஞ்சாப் மாநில முன்னாள் டி.ஜி.பியான கே.பி.எஸ். கில்லின்தலைமையில் 1,000 பஞ்சாப் கமாண்டோக்கள் அங்கு விரைந்துள்ளனர்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு ஆலோசகராக கடந்த வாரம் மத்திய அரசால் கில்நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து குஜராத் விரைந்த கில், அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நேற்று டெல்லி விரைந்து உள்துறை அமைச்சர் அத்வானியைச் சந்தித்துப் பேசினார்.

பஞ்சாப்பில் நன்கு பயிற்சி பெற்ற 1,000 ரிசர்வ் போலீஸ் கமாண்டோக்களை குஜராத்துக்கு அனுப்பிவன்முறைகளை ஒடுக்கலாம் என்று அப்போது அவர் அத்வானியிடம் கூறியதாகத் தெரிகிறது.

பஞ்சாப் அரசும் 1,000 கமாண்டோக்களை அனுப்ப முன் வந்துள்ளது. இது தொடர்பாக பஞ்சாப் உள்துறைச்செயலாளரிடம் ஏற்கனவே கில் கூறியிருந்தார்.

இதையடுத்து 1,000 பஞ்சாப் கமாண்டோக்களுடன் நேற்று மாலை குஜராத்துக்குத் திரும்பியுள்ளார். வன்முறைப்பகுதிகளில் கலவரக்காரர்களை அடக்கி ஒடுக்குவதில் நல்ல அனுபவம் கொண்ட இந்த கமாண்டோக்கள் தற்போதுவன்முறை தாண்டவமாடும் அகமதாபாத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறை தொடர்கிறது - மேலும் 6 பேர் பலி:

இதற்கிடையே குஜராத்தில் தொடரும் வன்முறைக்கு கடந்த 4 நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 24ஆகஉயர்ந்துள்ளது.

அகமதாபாத்தின் மணிநகர் பகுதியில் நேற்றிரவிலிருந்து நடந்த வன்முறைச் சம்பவங்களின்போது போலீசார்நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.

பிலோடா நகரில் முஸ்லீம் நபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+