ஊட்டி வருகிறார் ஜனாதிபதி
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் 15 நாள் பயணமாக இன்று (புதன்கிழமை) ஊட்டி வந்து சேருகிறார்.
டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வந்து சேரும்நாராயணன், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிக்குச் செல்கிறார்.
ஊட்டியில் 15 நாட்கள் நாராயணன் தங்கியிருப்பார். அப்போது பல தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்அவருக்கு சிறப்பு ஆயுர்வேத சிகிச்சையும் அளிக்கப்படவுள்ளது.
பின்னர் தன்னுடைய ஊட்டிப் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 22ம் தேதி விமானம் மூலம் டெல்லி கிளம்பிச்செல்வார் நாராயணன்.
ஜனாதிபதியின் வருகையையொட்டி, கோயம்புத்தூரிலும் ஊட்டியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன. சுற்றுலாப் பயணிகளுடன் ஊட்டிக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் கடுமையாகப்பரிசோதிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications