பிளஸ்டூ, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?
சென்னை:
பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வரும் 20ம் தேதியும் பத்தாவது வகுப்புத் தேர்வு முடிவுகள் 25ம் தேதியும் வெளியாகும் என்றுதெரிகிறது.
பத்தாவது மற்றும் பிளஸ்டூ வகுப்புத் தேர்வுத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்து விட்டது. தற்போது மதிப்பெண்களைகம்ப்யூட்டரில் தொகுக்கும் பணியும், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது.
இதையடுத்து வரும் 20ம் தேதிக்குள் பிளஸ் டூ தேர்வு முடிவுகளும், 25ம் தேதிக்குள் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளும்வெளியாகும் என்று தெரிகிறது.
தேர்வுகள் முடிந்த நிலையில் பேசிய கல்வியமைச்சர் தம்பிதுரை, விரைவாக தேர்வுத் தாள்கள் திருத்தப்பட்டு முடிவுகள்வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். அவர் கூறியபடியே இப்போது தேர்வு முடிவுகள் விரைவாக வெளியாகவுள்ளன.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வினாத்தாள் திருத்தும் மையங்களும், வினாத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களின்எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாகவே தேர்வுத் தாள்கள் விரைவாக திருத்தி முடிக்கப்பட்டுள்ளன.