மின்வாரிய அலுமினியத்தை "அள்ளிச் சென்ற" 5 பெண்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மின்வாரியத்திற்குச் சொந்தமான அலுமினியப் பொருட்களை திருடிச் சென்ற 5 பெண்களை போலீஸார் கைதுசெய்தனர்.உடந்தையாக இருந்த ஆட்டோ டிரைவரும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அயனாவரம் சாலையில் சப் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையில் போலீஸார் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.அப்போதுஒரு ஆட்டோ சந்தேகத்திற்கிடமான வகையில் வந்து கொண்டிருந்தது. உடனடியாக போலீஸார் அதை நிறுத்தினர்.
அதில் 5 பெண்கள் இருந்தனர். ஆட்டோவில் மின்வாரியத்திற்குச் சொந்தமான செப்பு மற்றும் அலுமினிய கம்பிகள் ஏராளமானஅளவில் இருந்தன. விசாரணையில் ஐந்து பேரும் அதை திருடிச் செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து ஆட்டோவில் இருந்த சாந்தி,சரஸ்வதி, யோகா, ஹெலன், குமாரி ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.
திருடிச் செல்வதற்கு உடந்தையாக இருந்த ஆட்டோ டிரைவர் நாராயணனும் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications