For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமாகா-காங். இணைப்பு: இன்று இறுதிக் கட்ட பேச்சு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை இணைப்பது தொடர்பான இறுதிக் கட்டபேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரமேஷ் சென்னிதாலா இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை சென்னை வந்தார்.

காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விரைவில் இணைகிறது. அநேகமாக ஜூலை மாதத்தில் இந்தஇணைப்பு இருக்கும் என்று தெரிகிறது.

அதற்கு முன்பாகப் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இணைப்புக்குப் பின் தற்போதுதமாகாவில் உள்ள "பெருந்தலைகளுக்கு" என்னென்ன பதவிகளை வழங்கலாம் என்பதற்கான பேச்சுவார்த்தைதற்போது வெகு தீவிரமாக நடந்து வருகிறது.

இன்று இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதற்காக தமிழக காங்கிரஸ் விவகாரத்தைக் கவனித்துக்கொள்ளும் பிரதிநிதியான ரமேஷ் சென்னிதாலா மற்றும் ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோர் இன்று காலைசென்னை வந்து சேர்ந்தனர்.

தமாகா தலைவர் ஜி.கே. வாசனுடன் அவர்கள் இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையை நடத்துகிறார்கள். இதில்ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக யார் இருப்பது என்ற முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுடனும் இவர்கள் இன்று பேச்சு நடத்தவுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X