சிறுபான்மையினருடன் கே.பி.எஸ். கில் நேரில் சந்திப்பு
அகமதாபாத்:
குஜராத் மாநில முதல்வரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பஞ்சாப் போலீஸ் முன்னாள் டி.ஜி.பி. கேபிஎஸ் கில்இன்று இஸ்லாமிய சமுதாயத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
முஸ்லீம்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதியளித்தார். அங்கு வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங் தள்ஆகிய அமைப்புகள் குஜராத் பா.ஜ.க. அரசு-போலீஸ் உதவியுடன் நடத்திய வன்முறையில் சிறுபான்மையினர்திட்டமிட்டுத் தாக்கப்பட்டன.
900 முஸ்லீம்கள் உயிரிழந்துள்ளனர். லட்சகணக்கான இஸ்லாமியர்களின் வீடுகளும் கடைகளும்எரிக்கப்பட்டுவிட்டன. ஊர்களைவிட்டு உயிருக்கு அஞ்சி குடும்பத்துடன் ஓடிப் போய்விட்டனபல்லாயிரக்கணக்கான குடும்பங்கள். லட்சக்கணக்கானோர் முகாம்களில் உள் நாட்டிலேயே அகதிகளாக வாழந்துவருகின்றனர்.
இந் நிலையில் தான் மாநில முதல்வர் நரேந்திர மோடியை நீக்க வேண்டும் என இந்தியா முழுவதும் குரல் எழுந்தது.அதற்கு மத்திய பா.ஜ.க. அரசு செவி சாய்க்கவில்லை.
ஆனால், உலக அளவில் கண்டனக் குரல்கள் எழுந்ததால் நாட்டின் பெயர் வெளிநாடுகளில் கெட்டது.இதையடுத்துத் தான் கே.பி.எஸ். கில்லை குஜராத்துக்கு அனுப்ப மத்திய அரசு முன் வந்தது.
அவர் தவறு செய்த மாநில போலீஸ் அதிகாரிகள் பலரை பந்தாடிவிட்டார். போலீஸ் மூத்த அதிகாரிகளைபாதிக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தினருடன் பேச்சு நடத்தவும் ஆணையிட்டார்.
இப்போது தானே இது போன்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். குஜராத்தின் அனைத்துமாவட்டங்களில் இருந்தும் அகமதாபாத் வந்திருந்த முஸ்லீம் சமுதாயத் தலைவர்களை இன்று அவர் சந்தித்துப்பேசினார்.
வன்முறை தொடர்பாக அனைத்து புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். புகார்களும் முழுமையாக பதிவுசெய்யப்படும் (பல்வேறு கற்பழிப்பு, கொலை, வீடு எரிப்பு வழக்குகளை மாநில போலீசார் பதிவு செய்யமறுத்துவிட்டது நினைவுகூறத்தக்கது) என அவர்களிடம் கில் உறுதியளித்தார்.
தங்களை போலீசாரே காட்டிக் கொடுத்ததாகவும் தாக்குதலுக்கு போலீஸாரே துணை நின்றதாகவும் அவர்கள்கில்லிடம் கண்ணீர் மல்ல எடுத்துக் கூறினர். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்கோரினர்.
தேசிய சிறுபான்மை கமிஷன் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.