தமிழர் பகுதிகளில் உளவு விமானங்கள்: புலிகள் புகார்
கொழும்பு:
வன்னி உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் இலங்கை விமானப் படையின் உளவு பார்க்கும் விமானியில்லா விமானங்கள்(unmanned aerial vehicles) அடிக்கடி பறந்து வருவதால் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவிடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன் கொடுத்துள்ள இந்தப் புகாரில்,
இந்த விமானங்களை முல்லைத் தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட தமிழர் பகுதிகளுக்கு அனுப்பி உளவு பார்ப்பதன்மூலம் போர் நிறுத்த ஒப்பந்ததின் அடிப்படையையே இலங்கை விமானப் படை கேள்விக் குறியாக்கியுள்ளது.
தமிழர்கள் நிறைந்த நகர்கள், கிராமங்களில் இந்த விமானங்கள் மிகக் குறைந்த உயரத்தில் பறக்கின்றன. இதனால்மக்கள் பீதியடைந்துள்ளனர். பள்ளிக் குழந்தைகள் அச்சத்தில் உறைகின்றனர்.
முன்பு போர் நடந்த காலங்களில் இந்த உளவு விமானங்கள் வந்துவிட்டுப் போன சில மணி நேரங்களில் பலத்தவிமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. தமிழர் பகுதிகள் மீது பலத்த குண்டு வீச்சுகள் நடந்துள்ளன. அதே போலஇப்போதும் நடக்குமோ என்ற அச்சம் பரவி வருகிறது.
இது நம்பிக்கையைக் குலைக்கும் செயலாகும் என்று தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார்.
முன்பு தமிழ் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியது. அது போல இப்போது விமானப்படையும் அமைதி முயற்சியைக் குலைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக புலிகள் கூறுகின்றனர்.
ஆனால், புலிகளுக்கு ஆயுதம் ஏந்தி வந்த படகுகளைத் தான் தாக்கினோம் என்று இலங்கைக் கடற்படை கூறியது.
அமைதி முயற்சிகளுக்கு அதிபர் சந்திரிகாவில் தொடங்கி பாதுகாப்பு வட்டாரங்களிலும் எதிர்ப்பு நிலவி வருவதுகுறிப்பிடத்தக்கது.