நாச வேலை காரணமாக விபத்துக்குள்ளான இந்திய ரயில்

Subscribe to Oneindia Tamil

பாட்னா:

டெல்லியிலிருந்து பாட்னா சென்று கொண்டிருந்த ஷ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸ் ரயில் உத்தரப் பிரதேசத்தில் நேற்றுவிபத்துக்குள்ளானது. இதற்கு நாச வேலைதான் காரணம் என்று தெரிய வந்துள்ளதாக ரயில்வேத்துறைஅமைச்சரான நிதிஷ் குமார் கூறினார்.

உ.பியில் ஜானுப்பூர் அருகே பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது இந்த ரயிலின் 11 பெட்டிகள் திடீரென்று தடம்புரண்டன. மிக வேகமாக சென்று கொண்டிருந்த இந்த ரயிலின் பெட்டிகள் விபத்தில் அப்பளம் போல நொறுங்கின.சம்பவ இடம் மிகப் பெரிய வெடிகுண்டுத் தாக்குதல் நடந்த இடம்மாதிரி இரும்புச் சிதறல்களுடன் கிடந்தது.

இந்த பயங்கர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிவருகின்றனர்.

சம்பவ இடத்தில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இந்த விபத்து நாசவேலை காரணமாகவேநடந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இரு தண்டவாளங்களையும் இணைக்கும் பிஷ் பிளேட்டுகள்அகற்றப்பட்டிருந்தன. மேலும் ஒரு தண்டவாளத் துண்டும் 2 மீட்டர் தொலைவில் தனியாகக் கிடந்தது.

இதனால் இது நாசவேலை காரணமாக நடந்துள்ள விபத்து என்று தான் கருதப்படுகிறது.

தண்டவாளத்தில் வேறு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை என்று வடக்கு ரயில்வேயின் தலைமை மக்கள்தொடர்பாளரான தேவேந்திர சந்து கூறினார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை ஓரிருநாட்களில் முடிவடைந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+