பிரேசிலிலிருந்து திரும்பினார் ஸ்டாலின்: சைதையில் இன்று பிரச்சாரம்
சென்னை:
உலக மேயர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரேசில் சென்றிருந்த சென்னை மாநகர மேயரான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை திரும்பினார்.
மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, முன்னாள் தமிழக அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட ஏராளமான திமுக பிரமுகர்கள்மற்றும் தொண்டர்கள் ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் அன்புடன் வரவேற்றனர்.
பிரேசில் செல்வதற்கு தமிழக அரசின் அனுமதி கிடைத்ததா என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, அனுமதி கேட்கவேண்டிய அவசியம் இல்லை, ஆனால் நான் அங்கு செல்கிறேன் என்று அரசுக்குத் தெரியப்படுத்தி விட்டேன்என்றார் ஸ்டாலின்.
இதற்கிடையே சைதாப்பேட்டை சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான மா.சுப்பிரமணியத்தை ஆதரித்து ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்யவுள்ளார்.
இன்று மாலை சுப்பு பிள்ளை தோட்டத்தில் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் ஸ்டாலின், இரவு 10 மணிக்கு பஜார்மார்க்கெட்டில் முடித்துக் கொள்கிறார்.












Click it and Unblock the Notifications