இந்தியாவில் புலிகளுக்கு மேலும் 2 ஆண்டுகள் தடை
டெல்லி:
விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்திய அரசு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை, தொடர்ந்து நான்கு முறை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி வடக்கு இலங்கையில் சர்வதேசப் பத்திரிக்கை நிருபர்களை புலிகளின்தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் சந்தித்தார். இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா உதவவேண்டும் என்றும் அப்போது அவர் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் தமிழகத்தில் உள்ள அதிமுக, காங்கிரஸ், தமாகா போன்ற கட்சிகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.கடந்த ஏப்ரல் 16ம் தேதி சூட்டோடு சூடாக புலிகளுக்கு எதிரான தீர்மானத்தையும் தமிழக சட்டசபையில் முதல்வர்ஜெயலலிதா நிறைவேற்றினார்.
இந்தத் தீர்மானத்தை மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆனால் திமுக மட்டும் எந்தப்பக்கமும் சாயாமல் நடுநிலை வகிப்பதாகக் கூறிவிட்டது.
இந்தத் தீர்மானத்தின் படி, பிரபாகரனைப் பிடிப்பதற்காக இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்என்றும் அவரை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டு வர வேண்டும் என்றும் புலிகளுக்கு எதிரான தடையைநீட்டிக்க வேண்டும் என்றும் பிரதமர் வாஜ்பாய்க்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கிடையே புலிகளுக்கு எதிரான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கடந்தஇரு நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வாழப்பாடி ராமமூர்த்தி வாஜ்பாய்க்குத் தந்திஅனுப்பியிருந்தார்.
இந்நிலையில் நேற்றுடன் புலிகள் மீதான தடை முடிவுக்கு வந்ததையடுத்து, ஐந்தாவது முறையாக புலிகள் மீதானதடையை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
சட்ட விரோதத் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (1967)ன் கீழ் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்தஇரண்டு ஆண்டுகளுக்கு இந்தத் தடை நீடிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.