"அம்மா"வுக்காக அம்மனுக்கு கையை வெட்டி காணிக்கை செய்த அதிமுக தொண்டர்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியையடுத்து தனது கையை வெட்டி பத்ரகாளியம்மன் கோவில்உண்டியலில் போட்டுள்ளார் ஒரு தீவிர "அம்மா பக்தர்".
தஞ்சாவூர் மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த ஒரு அதிமுக தொண்டர் சில மாதங்களுக்கு முன்பு தனது நாக்கை வெட்டிதிருப்பதி உண்டியலில் போட்டு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க டியாது.
அதற்குள் இன்னொரு பயங்கர சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
முதுகுளத்தூர் அருகே உள்ள உச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், தீவிர அதிமுக தொண்டர்இவர். ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் தனது கையை வெட்டிஅம்மனுக்கு காணிக்கை செலுத்துவதாக இவர் வேண்டியிருந்தாராம்.
கடந்த பிப்ரவரி இடைத் தேர்தலில் ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வர் பொறுப்பிலும்அமர்ந்தார். இதையடுத்து தனது காணிக்கையை நிறைவேற்ற நல்ல நாள் பார்த்துக் காத்திருந்தார் பாலசுப்ரமணியன்.
இந்நிலையில் சமீபத்தில் சிவகாசியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா வந்தது. அப்போது தனதுகாணிக்கையை நிறைவேற்ற முடிவு செய்தார் பாலசுப்ரமணியன்.
கோவிலுக்குச் சென்ற அவர் தனது கையை வெட்டி பின்னர் அதை கோவில் உண்டியலிலும் போட்டுள்ளார். இதைப்பார்த்து பயந்து போன கோவிலுக்கு வந்த மற்ற பக்தர்கள் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு வெட்டப்பட்டகையுடன் கொண்டு சென்றனர்.
ஆனால் அவரது கையை மீண்டும் சேர்த்து வைக்க முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.
57 வயதாகும் பாலசுப்ரமணியனுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களில் 2 பேருக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். மூன்றாவது மகளுக்கு திருமணம் செய்து வைக்க வறுமையாக தடையாக இருக்கிறது.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்காக தியாகம் செய்தால் ஏதாவது உதவி கிடைக்கலாம் என்று சிலர் அறிவுரைகூறியதாகத் தெரிகிறது. ஏற்கனவே தீவிர ஜெயலலிதா பக்தரான பாலசுப்ரமணியம், இந்த அறிவுரையை நம்பிகையைத் துண்டித்து இப்போது தனது வாழ்க்கையையே முடமாக்கிக் கொண்டுள்ளார்.
நாக்கை வெட்டிக் கொண்ட அதிமுக தொண்டருக்கு உதவித் தொகை அளித்ததோடு நில்லாமல், அவருக்குபிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மீண்டும் நாக்கைப் பொருத்துவதற்கான மருத்துவ வசதிகளையும் ஜெயலலிதா அளித்தார்என்பது குறிப்பிடத்தக்கது.