வெயில் கொடுமை: இந்தியா நாடு 439 பேர் சாவு
டெல்லி:
இந்தியாவில் இந்த ஆண்டு நிலவும் கடுமையான கோடையின் வெப்பத்துக்கு இதுவரை 439 பேர் இறந்துள்ளனர்.
சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கோடை வெயில் இந்திய மக்களை வாட்டியெடுக்கத்தொடங்கி விட்டது.
குளிர் காலத்தில் உறைபனியால் மூடப்படும் தலைநகர் டெல்லி கூட கோடை காலத்தில் கடும் வெப்பத்தால் சிக்கித்தவிக்கிறது. அங்கு 110 டிகிரி பாரன்ஹீட்டையும் தாண்டி வெப்பநிலை நிலவி வருகிறது.
ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களிலும் வெயில் வெளுத்து வாங்குகிறது.ஆந்திராவில் மட்டும் இதுவரை 373 பேர் வெயில் காரணமாக இறந்துள்ளனர். பலர் நடு ரோட்டிலேயே சுருண்டுவிழுந்து இறந்தனர்.
மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
தமிழகத்திலும் வெயில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இங்கு இதுவரை 5 பேர் இறந்துள்ளனர். சென்னையில்தொடர்ந்து 4வது நாளாக 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தால் அந்நகர மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்தக் கடும் வெயிலுக்கு இடையே, திடீர் திடீரென்று அறிவிக்கப்படாத மின் வெட்டுக்களும் மக்களைப் பெரிதும்இம்சித்து வருகின்றன. இதனால் மக்கள் வெளியிலும் செல்ல முடியாமல், வீட்டிற்குள்ளும் இருக்க முடியாமல்மிகுந்த அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.