குழாயடிச் சண்டை போடும் அதிமுக-திமுக: இளங்கோவன்
சென்னை:
தமிழக சட்டசபையில் நடந்த விவாதங்களின்போது குழாயடிச் சண்டை போல அதிமுகவினரும் திமுகவினரும்சண்டை போட்டு நேரத்தை விரயமாக்கினர் என்று தமிழக காங்கிரஸ் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்கூறினார்.
இதுகுறித்து இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுகவும் திமுகவும் சட்டசபையில் பரஸ்பரம் ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக் கொண்டார்களே தவிர வேறுஎதுவும் இந்த ஓராண்டில் சாதிக்கப்படவில்லை.
சட்டசபை விவாதத்தின் போது குழாயடிச் சண்டை போல இரு கட்சிகளும் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்வார்கள்.இவ்வாறு அவர்கள் நேரத்தை மட்டும் விரயமாக்கினார்களே தவிர, மக்களுக்காக எந்தவிதமான நன்மையையும்செய்யவில்லை.
அரசு ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள் போன்றோரின் இன்னல்கள் தீர்ந்த பாடில்லை. அத்தியாவசியபொருட்களின் விலையை உயர்த்தி உள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதனால் ஒரு வேளை உணவு கூட உண்ணமுடியாத கொடுமைக்கு ஏழை எளியோர் தள்ளப்பட்டுள்ளனர்.
இவை தான் அதிமுக அரசு ஒராண்டு ஆட்சிப் பொறுப்பில் இருந்த செய்த சாதனைகள்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கைது செய்ய மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து தமிழக அரசு தீர்மானம்நிறைவேற்றி இருப்பது மட்டும் வரவேற்கத்தக்கது என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications