For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஒருவருக்கு ஒரு பதவி" சட்டத்தை எதிர்த்து ஆளுநரிடம் திமுக மனு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மேயர் மு.க. ஸ்டாலின் பதவியைப் பறிக்கும் வகையில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சட்டத்திற்குஎதிர்ப்பு தெரிவித்து சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் ஆளுநர் ராமமோகன் ராவிடம் மனு கொடுத்தனர்.

திமுக, பாமக, எம்ஜிஆர் கழகம், தமிழ் மாநில தேசிய லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சென்னை மாநகராட்சிகவுன்சிலர்களும் ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்தனர்.

இது குறித்து திமுக கவுன்சிலர் குழுத் தலைவர் மலையன் கூறியதாவது:

இந்த சட்டம் ஸ்டாலின் என்ற தனிப்பட்ட மனிதரை பழிவாங்குவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்குஅரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணமாகும். இந்த பதவி பறிப்புச் சட்டம் ஜனநாயக முறைக்கு தேவையில்லாதஒன்று.

மேயர் பதவி பறிப்பு சட்டம், நிதிவரம்பு பறிப்புச் சட்டம் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கோரிஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம் என்று தெரிவித்தார் மலையன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X