For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அச்சிறுப்பாக்கத்தில் அதிமுகவினர் அராஜகம்

By Staff
Google Oneindia Tamil News

அச்சிறுப்பாக்கம்:

சமீபத்தில் மறைந்த அச்சிறுப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏவான செல்வராஜின் மனைவியையும் அவருடையஉறவினர்களையும் அதிமுகவில் சேரச் சொல்லி அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் மிரட்டுவதாக பாமகதலைவரான ஜி.கே. மணி புகார் கூறினார்.

அச்சிறுப்பாக்கத்தில் பாமக வேட்பாளரான பார்வேந்தனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதற்காக வந்திருந்த மணிநிருபர்களிடம் கூறியதாவது:

அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் சுவர்களில் அதிமுகவினர் தேர்தல்விளம்பரங்களை எழுதியுள்ளனர். இது சட்டத்திற்கு விரோதமானது.

ஆட்சியில் இருப்பதால் அதிமுக தொடர்ந்து இதுபோன்ற அதிகாரத் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.

மேலும் மறைந்த செல்வராஜின் மனைவியையும் அவருடைய குடும்பத்தினரையும் அதிமுகவில் சேர வேண்டும்என்று சில அமைச்சர்களும் அக்கட்சி எம்.எல்.ஏக்களும் மிரட்டி வருகின்றனர். அப்படிச் சேராவிட்டால் கொன்றுவிடப் போவதாவும் மிரட்டியுள்ளனர்.

இவர்களைத் தவிர பாமகவைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களையும் கூட அதிமுகவில் வந்துசேராவிட்டால் தொலைத்து விடுவோம் என்று அதிமுகவினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

தேர்தல் பயத்தினால் வன்முறையைக் கட்டவிழ்த்து விட அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். எனவே தேர்தல்பாதுகாப்பாக நடைபெறுவதற்காக இங்கு கூடுதல் பார்வையாளர்களையும் சிறப்பு பாதுகாப்புப் படையினரையும்தமிழகத்துக்கு அனுப்ப வேண்டும் என்றார் மணி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X