சைதை, வாணியம்பாடியில் செங்கை சிவம் வேட்பு மனு வாபஸ்
சென்னை:
சைதாப்பேட்டை, வாணியம்பாடியில் தொகுதிகளில் தனது வேட்பு மனுக்களை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொண்டதையடுத்து இரு மனுக்களையும் இன்று வாபஸ் பெற்றார் திமுக முன்னாள் எம்.எல்.ஏவான செங்கைசிவம்.
இரண்டுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுபவர்களின் கதி என்னவாகும் என்பதை மக்களுக்குத்தெரியப்பத்துவதற்காக, சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளிலும்செங்கை சிவத்தை மனுத் தாக்கல் செய்யும்படி திமுக ஆணையிட்டது.
இதன்மூலம் கடந்த தேர்தலில் ஜெயலலிதாவின் 4 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு திமுக தான்காரணம் என்ற குற்றச்சாட்டையும் களங்கத்தையும் துடைக்க திமுக திட்டமிட்டிருந்தது.
அதன்படியே செங்கை சிவம் மூன்று தொகுதிகளிலும் தாக்கல் செய்தார். இரண்டுக்கு மேற்பட்ட தொகுதிகளில்தாக்கல் செய்துள்ளதால் அவருடைய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக நினைத்தது.
ஆனால் அச்சிறுப்பாக்கத்தில் மட்டும் செங்கை சிவத்தின் மனுவை நேற்று தள்ளுபடி செய்த தேர்தல் கமிஷன்,சைதாப்பேட்டையில் அதை ஏற்றுக் கொண்டது. வாணியம்பாடியிலோ இன்று பிற்பகல் வரை பரிசீலனை செய்துகொண்டிருப்பதாகக் கூறியது. மாலையில் வேட்பு மனுவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.
சைதாப்பேட்டையில் அவருடைய மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக வழக்கறிஞரான ஆர்.எஸ்.பாரதி எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் செங்கை சிவத்தின் மனுவை எந்தவிதமானபிரச்சனையும் இல்லாமல் தேர்தல் அதிகாரியான ஜெயேந்திர சேவியர் ஏற்றுக் கொண்டு திமுகவுக்கு அதிர்ச்சிதந்தார்.
அதே போல வாணியம்பாடியிலும் செங்கை சிவத்தின் மனு ஏற்கப்பட்டதால் திமுகவுக்கு இன்றும் இன்னொருஅதிர்ச்சி கிடைத்தது.
சைதாப்பேட்டையில் தொகுதியில் ஏற்கனவே திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மா.சுப்பிரமணியம் களத்தில்இருப்பதாலும், தேர்தல் கமிஷனுடன் விளையாடிப் பார்க்கவே செங்கை சிவத்தை மூன்று தொகுதிகளிலும் மனுத்தாக்கல் செய்யச் சொல்லி திமுக தலைமை கூறியிருந்ததாலும், இத்தொகுதியில் செங்கை சிவம் தன்னுடைய வேட்புமனுவை நிச்சயம் வாபஸ் பெறுவார் என்று கூறப்பட்டது.
அவர் தன்னுடைய மனுவை வாபஸ் பெறுவார் என்று திமுக தலைவர் கருணாநிதியும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சைதாப்பேட்டை தொகுதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தன்னுடைய வேட்பு மனுவை செங்கை சிவம்இன்று காலை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
மாலையில் வாணியம்பாடியிலும் வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இது அரசியல்ரீதியில் திமுகவுக்குக் கிடைத்த மிகப் பெரிய அடி என்று கருதப்பட்டாலும் ஜெயலலிதாவுக்கு ஒரு நீதி,திமுகவுக்கு ஒரு நீதி என்று தேர்தல் கமிஷன் நடந்து கொண்டிப்பது மக்களிடையே பலவிதமான சந்தேகங்களைஏற்படுத்தியுள்ளது.
இதற்கான விளக்கத்தை தேர்தல் கமிஷன் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications