நான் யாரையும் கற்பழிக்கவில்லை: தேவாரம் சாட்சியம்
பெங்களூர்:
அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட பெண்ணை நான் கற்பழித்ததாகக் கூறப்படுவது பொய் என்றுசதாசிவம் கமிஷன் முன் தமிழக அதிரடிப் படையின் தலைவரான தேவாரம் கூறினார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மலைப்பகுதியில் உள்ள பழங்குடியினப்பெண்களிடம் அதிரடிப் படையினர் அத்துமீறி நடந்து கொண்டதாகப் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து ஓய்பு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியான சதாசிவம் தலைமையிலான கமிஷன் கடந்த சிலமாதங்களாக மாதேஸ்வரன் மலையில் விசாரணை நடத்தியது.
அதன் தொடர்ச்சியாக பெங்களூரிலும் நீதிபதி சதாசிவம் கமிஷன் விசாரணையைத் தொடங்கியுள்ளது. அப்போதுதமிழக அதிரடிப் படையின் தலைவரான தேவாரம் நீதிபதி சதாசிவம் முன் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 1993ம் ஆண்டு தமிழக அதிரடிப் படை அமைக்கப்பட்டது. அந்த ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி முதல் 1997ம்ஆண்டு ஜூலை 30ம் தேதி வரை நான் அதிரடிப் படைத் தலைவராகப் பணியாற்றினேன்.
ஹசனூர், கடம்பூர், தாமரக்கெரே, பண்ணாரி மற்றும் மேட்டூர் ஆகிய ஊர்களில் அதிரடிப் படை முகாம்கள்அமைக்கப்பட்டிருந்தன. மேட்டூரில் ஒரு பள்ளிக் கட்டடத்தைத்தான் அதிரடிப் படையினர் ஒரு ஸ்டோர் ரூமாகப்பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் அந்த ஸ்டோர் ரூமுக்குள் பெண்களை அழைத்து வந்து அத்துமீறி நடந்து கொண்டது பற்றி எனக்கு எதுவும்தெரியாது. அந்தக் குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் பொய்.
மேலும் அங்கு பெண்கள் அத்துமீறி நடத்தப்பட்டது குறித்து எனக்கும் எந்தவிதமான புகாரும் வரவில்லை. கிராமமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அதிரடிப் படையினருக்கு நல்ல பயிற்சியும்அளிக்கப்பட்டிருந்தது.
தங்கம்மாள் என்ற பெண்ணை நான் கற்பழித்ததாகப் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பெண்ணை நான்பார்த்ததே இல்லை.
என்னைப் போன்ற பெரிய அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தினால் நிறைய நிதி உதவி கிடைக்கும் என்பதற்காக அவர்என் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் நான் தங்கம்மாளைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டேன் என்ற புகாரும் பொய்யானது என்றார் தேவாரம்.
இதன் பிறகு மேலும் சில போலீஸ் அதிகாரிகளிடம் நீதிபதி சதாசிவம் விசாரணை நடத்தினார்.












Click it and Unblock the Notifications